Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் கக்கன் காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சமுதாயக் கூடம் அமைத்து தருமாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் மனுக்கள் அளித்தனர்.
அதன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18 லட்சம் செலவில் புதிய சமுதாய கூடத்தை கட்டி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் தமிழ்ழகன் ஒன்றிய செயலாளர்கள் அசோக் குமார் கணேசன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.